1. ஊர் திருவிழாவில்
உன்ன பாவாடை தாவணியில்
பார்க்கும் வரை
"ஊதா பாவாடை ,வெள்ளைச் சட்டையை"
விட அழகான ஆடை இருக்கலாம்
என்று நம்பியதில்லை....
அன்று முதல்
"நீ அணிந்த அரக்கு பாவாடையும்
ஊதா தாவணியும் "
-------------++++++++++++++++++----------------------------------------
2 .நீ குளிக்கும்
கிணறு என்பதால்
எதையும் யோசிக்காமல்
குதித்த போது
கற்றுக்கொண்டதுதான் நீச்சல்
----------------------------+++++++++++++++++-------------------------
3.அன்பரசி டீச்சரை
அசிங்கமாய் பேசினதால்
ராமுவின் மீது
கபடி ஆடிக்கொண்டிருந்த
என்னை
நீ பார்த்த பார்வை
"இந்த வேண்டாத வேலை எல்லாம்
உனக்கு எதுக்கு ?"
என்பது போல் இருந்தது......
"விழிமொழி" கற்றுக்கொண்ட
முதல் நாள் அது...
----------------------------++++++++++++++-----------------------------
4.நீயும் நானும்
ஒரே நாளில் மிதிவண்டி
கற்றுக்கொள்ள திடலுக்குப் போனோம்
கடைசியில்
"நீ மிதிவண்டி கற்றுக்கொண்டாய்"
"நான் உன்னிடம் மயங்கக் கற்றுக்கொண்டேன்"
----------------------------++++++++++++++--------------------------------
5."என் ராசா ,ஏழு நாள்
பூசைக்கும் தவறாம வந்துச்சு"
என்ற லட்சுமி பாட்டியிடம்
"உன் பின்னாலே வந்து,
உன் எதிரே அமர்ந்து,
உன் உதட்டசைவை
பின்தொடர்ந்ததை தவிர
வேறொன்றும் இல்லை"
என்பதை சொன்னதும்
கிடைத்து நான் வாங்கிய
முதல் பட்டம்........
"காளிப்பய " ,"காளிப்பய"
------- ச.பாலச்சந்தர்
0 comments:
Post a Comment